கனிமொழி எம்பியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

by Editor / 27-11-2022 08:10:19pm
கனிமொழி எம்பியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் நடந்த சமயம்  கனிமொழி அங்கு இருந்தாரா என தகவல் இல்லை... இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த விசாரணையின் ஒருபகுதியாக சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் கனிமொழி எம்பியின் வீட்டுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,
 

கனிமொழி எம்பியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.
 

Tags :

Share via