பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

by Staff / 30-11-2022 12:14:19pm
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

அரக்கோணம் அருகே காவேரிப்பாக்கம் பகுதியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் முருகன். இவர் இங்கு பயின்று வரும் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் முருகன் மீது போக்சோ பிரிவின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் முருகன் தலைமறைவானதை அடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via