குடிசைப்பகுதியில் பெரும் தீ விபத்து
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நகரின் ஃபதாசில் அம்பாரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அவை பக்கத்து குடிசைகளுக்கும் பரவி அனைத்து வீடுகளும் தீக்கிரையாகின. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :