போலி நீதிபதி கைது

by Staff / 13-12-2022 05:34:21pm
போலி நீதிபதி கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போலி நீதிபதி சிக்கினார். மஜிதா சாலையில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் மிஷுதிர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார். நீல நிற சைரன் வைத்த காரில், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் என்ற பெயர் பலகை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தது.மேலும் சமீபத்தில் அவர், காவல்துறை ஏசிபி வடக்கு வரீந்தர் கோசாவை அழைத்து தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இரவில் போலீசார் ரோந்து பணி செய்வதில்லை என்றும் புகார் கூறினார். இதனால் சந்தேகமடைந்த ஏசிபி விசாரணை நடத்தியதில் அவர் போலி நீதிபதி என தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட மீஷுவை கைது செய்த போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
 

 

Tags :

Share via