குளத்தில் மிதந்த ஆண் சடலம்

by Staff / 17-12-2022 04:03:54pm
குளத்தில் மிதந்த ஆண் சடலம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சித்திரை சாவடி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் 39 வயதான பழனி, இவருக்கு நேற்று சித்திரைச்சாவடி அருகே உள்ள, முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள புதிய குளம் என்ற குளத்தில் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via