கஞ்சா சோதனை மேலும் 16 பேர் கைது

by Staff / 18-12-2022 04:17:41pm
கஞ்சா சோதனை மேலும் 16 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த கஞ்சா தடுப்பு வேட்டையில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ். பி. , ஸ்ரீநாதா தலைமையில் அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பழைய குற்ற வாளிகளின் வீடுகளுக்குச் சென்று, கஞ்சா விற்கப்படுகிறதா, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் மாவட்ட முழுவதும் போலீசார் கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் கஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 16 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1. 37 கிலோ கஞ்சாவும், 30 மி. லி. , கஞ்சா பேஸ்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மாவட்டம் முழுதும் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via