சபரிமலையில் நாளை மண்டல பூஜை-பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

by Editor / 26-12-2022 06:37:25am
சபரிமலையில் நாளை மண்டல பூஜை-பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தட்டுப்பாடு இல்லாததால் வழக்கத்தை விட அதிகமாக வர தொடங்கினர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு ஆதார் கார்டு மூலம் உடனடி பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : சபரிமலையில் நாளை மண்டல பூஜை

Share via