நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு, அதிமுக துணை நிற்கும் - முன்னாள் அமைச்சர் பேச்சு

by Writer / 08-01-2022 11:50:48am
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு, அதிமுக துணை நிற்கும் - முன்னாள் அமைச்சர் பேச்சு

நீட் விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமானது நாமக்கல் கவிஞர் மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என முன்னாள் சுகாதாரத் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரித்து மாணவர்களை தயார் செய்ய வேண்டும் எனவும், மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் எனவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via