வீடுகளை இடிக்கும் உத்தரவுக்கு தடை

by Staff / 05-01-2023 03:55:40pm
வீடுகளை இடிக்கும் உத்தரவுக்கு தடை

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹால்ட்வானி நகரத்தில் ரயில்வேவுக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்து இருப்பதாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் 4000 வீடுகள், 4 அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, 10 மசூதிகள், 4 கோயில்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலையில் நிர்வாகம் இறங்கிய நிலையில், ஹால்ட்வானி மக்கள் போராட்டம் நடத்தி மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவுக்கு தடை விதித்தது.

 

Tags :

Share via