யானை தாக்கி 4 பேர் பலி

by Staff / 08-01-2023 03:32:49pm
யானை தாக்கி 4 பேர் பலி

ஒடிசாவின் அனுகுல் மாவட்டத்தில் நேற்று கிராமங்களுக்குள் நுழைந்த யானை வீடுகளை நாசம் செய்து நான்கு பேரைக் கொன்றது. வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை தாக்கி, கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்களை இடித்து தள்ளியது. இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் கவலை அடைந்தனர். யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

 

Tags :

Share via