வெளிமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 10-01-2023 05:32:54pm
வெளிமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சட்டீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டம் பர்ஷா பகர்தாசில் டுங்காதாரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெகேஸ்வர்கடியா (வயது 40). கூலி தொழிலாளி. இவரும், இவரது மகன் சமீரநாயக் (17) என்பவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மேல்சாத்தம்பூரில் உள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் கடந்த 6 மாதமாக வேலை செய்தனர்.இருவரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, அங்கிருந்து மேலும் 6 பேருடன் கடந்த 8-ந் தேதி மேல்சாத்தம்பூர் வந்துள்ளனர். அன்று இரவு செல்வகுமார் வீட்டின்அருகில் உள்ள கொட்டகையில் 8 பெரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நடு இரவில் எழுந்து பார்த்தபோது, ஜெகேஸ்வர்கடியாவை காணவில்லை.இதையடுத்து அவரது மகன் சமீரநாயக், அருகில் படுத்திருந்தவர்களிடம் தெரிவித்து தந்தையை தேடியுள்ளார். அப்போது வெளியில் இருந்த வேப்ப மரத்தில் ஜெகேஸ்வர்கடியா தூக்குப் போட்டுக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரிக் வண்டி உரிமையாளர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உதவியுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெகேஸ்வர்கடியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சமீரநாயக் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via