ஐதராபாத்தில் ஆணவக் கொலை

by Staff / 17-01-2023 12:20:36pm
ஐதராபாத்தில் ஆணவக் கொலை


ஐதராபாத்தை சேர்ந்த கலிம் என்ற 25 வயது இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லாமலேயே நடந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பெண்ணின் சகோதரர்கள் கலீமை கொல்ல திட்டமிட்டனர். அவர்கள் கலீமை கடந்த ஞாயிறு இரவு தங்களது வீட்டிற்கு அழைத்தனர். அவர்கள் மன மாறிவிட்டதாக நினைத்து கலீம் அங்கு சென்றார். ஆனால் அவர்கள் கலீம் சாலையில் வந்துகொண்டிருந்தபோதே வெட்டி கொன்றனர். பின் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

Tags :

Share via