10 ரூபாய்க்காக துப்பாக்கிச்சூடு

by Staff / 17-01-2023 12:21:35pm
10 ரூபாய்க்காக துப்பாக்கிச்சூடு

ஜார்கண்ட் மாநிலம் பலமூ மாவட்டத்தில் சோனு என்பவர் தனது 3 நண்பர்களுடன் வினய் குப்தா என்பவரின் மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் மதுபானம் வாங்கிய நிலையில், வினய் குப்தா இவரிடம் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டுள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதல் முற்றியது. பின் சோனு தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து 7 முறை சராமாரியாக சுட்டார். இதில் அந்த கடையில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via