நாளை முதல் மீண்டும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 14 -ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு படிபடியாக குறைந்து வருவதால் நாளை முதல் மீண்டும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா தெரிவித்துள்ளார்..
Tags :