சந்தேகத்திற்கு இடமாக குழுவாக இருக்கும் மாணவர்களை அழைத்து விசாரித்து கலைந்து செலும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

by Editor / 18-07-2022 03:24:58pm
சந்தேகத்திற்கு இடமாக குழுவாக இருக்கும் மாணவர்களை அழைத்து விசாரித்து கலைந்து செலும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கனியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற +2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதிகேட்டு ஆவடி அதனை சுற்றியுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் வாட்சப் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஆவடி பேருந்து நிலையத்தில் 2 உதவி ஆணையர்கள் 3 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via