இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து உயிரிழப்பு

by Staff / 22-04-2022 03:43:47pm
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து உயிரிழப்பு


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் சென்டர் மீடியன் அருகே கிடந்த கல் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற பழ வியாபாரி திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது காக்காத்தோப்பு பிரிவு அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகே கிடந்த கல் மீது அவர் வாகனம் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார் இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

Tags :

Share via