ஆந்திராவிற்கு கடத்த முயன்ற அக்கா கணவர் போக்சோவில் கைது

by Staff / 24-03-2022 05:09:53pm
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற அக்கா கணவர் போக்சோவில் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம் பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பெண்  இவர் கடலூர் பகுதியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அக்கா கணவர்  மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவர். பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதில், அன்பரசன் ஒப்புக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி அழைத்து சென்று உள்ளார்.

மாணவியின் தந்தை, தனது மகளை காணவில்லை,  அன்பரசன் கடத்தி சென்று இருக்கலாம் என காடாம்புலியர் போலீசில் புகார் செய்தார்.
 
இதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது சிறுமியை ஆந்திராவிற்கு அழைத்து செல்ல இருப்பதை அறிந்த, போலீசார் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது கையும் களவுமாக பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைவியில் கொண்டு சேர்த்தனர்.

 

Tags :

Share via