மாலை, சால்வை தேவையில்லை-முதல்வர் பசவராஜ் பொம்மை
முதல்வர் பசவராஜ் பொம்மை, சில நாட்களுக்கு முன், அரசு நிகழ்ச்சிகளில், மக்கள் பிரதிநிதிகளுக்கு, மலர் மாலை அணிவிப்பது; சால்வை போர்த்துவது போன்ற ஆடம்பரம் தேவையில்லை, பரிசுப்பொருட்களும் வழங்கக்கூடாது என கூறி, தடை விதித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பூ விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, தான் செயல்படுத்திய விதிமுறையை, தானே மீறியுள்ளார்.பெங்களூரு விதான்சவுதாவின் பேங்கட் ஹாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பங்கேற்றார். இதில் இவருக்கு பட்டுக்கூடுகளால் தயாரிக்கப்பட்ட பெரிய மாலை, மைசூரு தலைப்பாகை, சால்வை, வெள்ளி நினைவு பரிசு வழங்கப்பட்டது.இதே போன்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் ஷோபாவும் கவுரவிக்கப்பட்டனர்.
Tags :