அரசு பேருந்து - கார் மோதி விபத்து 7 பேர் உயிரிழப்பு

by Staff / 24-10-2023 11:37:14am
அரசு பேருந்து - கார் மோதி விபத்து 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கார், பேருந்தில் பயணம் செய்த 14-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் யார்? விபத்து நிகழ்ந்தது எப்படி? என மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via