தலை பொங்களுக்கு மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்.
பொங்கல் பண்டிகை திருவிழா கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் களைகட்டியது. இந்த ஆண்டு உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் தமிழர்கள் இந்த தைத்திருநாளை குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஆந்திராவின் எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் என்பவர் தனது மகள் குஷ்மா மற்றும் மருமகன் புத்தா முரளிதர் ஆகியோரை தலை பொங்கலுக்காக விருந்துக்கு அழைத்துள்ளார்.மனைவி வீட்டில் தலைப்பொங்கலை கொண்டாடிய புது தம்பதிக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார் தடபுடலாக விருந்து வைத்துள்ளார். அந்த உணவு வகைகளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த மருமகன் முரளிதர், 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட சாப்பிடவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், ஆந்திராவில் 179 வகையான பிரமாண்ட விருந்தை இந்த விருந்து பின்னுக்கு தள்ளியுள்ளது.இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பேசும் பொருளாகியுள்ளது.
Tags : Mother-in-law who served 379 types of food for Thalai Pongal