78 பேர் உயிரிழந்த பரிதாபம்

by Staff / 20-01-2023 12:13:57pm
78 பேர் உயிரிழந்த பரிதாபம்

தலிபான்களின் ஆட்சியில் தத்தளித்து வரும் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி திணறி வருகிறது. இதுதவிர அங்கு மிகக் குறைந்த வெப்பநிலையால் மக்கள் நாளுக்கு நாள் தங்கள் உயிரை பாதுகாக்க போராடி வருகின்றனர். கடந்த வாரத்தில் கடும் குளிரால் 78 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், 75 ஆயிரம் கால்நடைகளும் இறந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தற்போது -35 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை நிலவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via