கோர விபத்து: 9 பேர் பலி

by Staff / 20-01-2023 12:10:14pm
கோர விபத்து: 9 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மங்கோன் மாவட்டத்தில் உள்ள ரெபோலி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 9 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் அடங்குவர். விபத்தில் நான்கு வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Tags :

Share via