கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

by Staff / 20-01-2023 02:31:17pm
 கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது செல்சினி காலனி மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.இதில் தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் முகேஷ் (23) மற்றும் தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (21) ஆகிய இருவரும் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி கைது செய்யப்பட்ட முகேஷ் மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகளும், இசக்கிமுத்து மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது.

 

Tags :

Share via