எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கி தவிக்கிறது -டிடிவி

by Editor / 22-01-2023 01:03:50pm
எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கி தவிக்கிறது -டிடிவி

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்.  106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், எம்ஜிஆரை பற்றி குறை கூற திமுகவினரே யோசிப்பார்கள் என்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி அமைக்க உதவியவர் எம்.ஜி.ஆர் தான் என்றும் கூறினார். திமுகவினர் வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி என்று சொன்னாலும்,  தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 சதவீதமாக உயர்த்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போடும் போட்டி டெல்லி வரை சென்று நிற்கிறது என்றார்.  எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கி தவிக்கிறது என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்,  எடப்பாடி பழனிச்சாமியை ஒரு துரோகி என விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்  கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இந்த தேர்தலில்  என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில்  வெற்றி பெற வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via