சாராயம் கடத்தியவர் கைது

by Staff / 30-01-2023 02:48:38pm
சாராயம் கடத்தியவர் கைது

ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். தனியார் பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் லாரி டியூப்பில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மணிவிழுந்தான் ராமசேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலு (வயது 35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவை கைது செய்தனர். இதற்கிடையே தலைவாசல் வடக்கு கல்வராயன் மலை ஓடைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி சென்றனர். அங்கு 5 பேரல்களில் இருந்த 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

 

Tags :

Share via