காதல் தோல்வியால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூர் அருகே காதல் தோல்வியால் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் ராஜ்கண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இசக்கியப்பன். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் பரமசிவம் (22). இவர் தூத்துக்குடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.பரமசிவம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். தகவல் அறிந்து வந்த கணேசன், தன்னுடைய மகன் பரமசிவத்தை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பரமசிவம் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தாராம். ஆனால் அந்த மாணவி இவரது காதலை ஏற்கவில்லை இதனால் வாழ்க்கையில் விர்கதியடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :