வாளுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சேதுபதி கார்த்திக் (28) என்பதும் அவர் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்காக வாளுடன் சுற்றித்திரிந்தது தெரிந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடத்தனர்.
Tags :