100-கிலோ கஞ்சா ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய மூவர்: கைது

by Staff / 02-02-2023 04:57:41pm
100-கிலோ கஞ்சா ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய மூவர்: கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை வழியாக கஞ்சா கருத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய்க்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்தவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு ஜெயினி மேடு பகுதியைச் சேர்ந்த காசிம் மகன் மன்சூர் அலி, கொல்லம் பெரிநாடு புனர்திவாசா காலனி சேர்ந்த நவ்சத் மகன் முத்தாலிப், கொல்லம் பனையம் தெகவெளத்தாடியைச் சபுதீன் மகன் நாசர் என்பதும் தெரியவந்தது.அவரிகளிடமிருந்த 100-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via