மேலப்பாளையம் பள்ளிவழக்கம் போல் செயல்படும்.

by Editor / 05-02-2023 10:36:21pm
 மேலப்பாளையம் பள்ளிவழக்கம் போல் செயல்படும்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளியின் தாளாளரை போக்சோ சட்டத்திலும் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆகிய மூன்று பேரும்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய தாளாளராக பரக்கத்உம்மா மற்றும் தலைமை ஆசிரியராக கதிஷா பானு ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வித்துறை நியமனம் செய்து அறிவித்துள்ளது.மேலும் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்றும், மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via