திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரிசனம்

by Editor / 05-02-2023 10:38:05pm
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று நடைபெற்றது. இதனைமுன்னிட்டு  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்யவந்தார்.  கோவிலில் மூலவர்,  சண்முகர் பிரகாரங்களில் சுவாமி  தரிசனம் செய்தார். அவரிடம் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்திருப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குபதில் கூற மறுத்த அவர்  அங்கிருந்து புறப்பட்டுசென்றார்.

 

Tags :

Share via