சென்னையில் வாகனதிருட்டை தடுக்க 50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா

by Editor / 06-02-2023 08:17:35am
சென்னையில்  வாகனதிருட்டை தடுக்க  50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா

சென்னையில் பெரும்பாலும் நடைபெறும் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு,
பணத்திற்கான கொலை, மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு, திருட்டு வாகனங்களையே குற்றவாளிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை கைது செய்யும் போது திருட்டு வாகனம் என்பது பறிமுதல் செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 1500 வாகனங்கள் திருடு போவதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதனால் வாகனங்கள் திருடு போவதை தடுக்கவும், திருடப்பட்ட வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும், சென்னை காவல்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுவருகிறது.அதன் அடிப்படையில் TROZ எனப்படும் போக்குவரத்து முறைப்படுத்துதல் கண்காணிப்பு மண்டல திட்டம் அடிப்படையில் 200 அதிநவீன ஏ என் பி ஆர் கேமராவை சென்னை முழுவதும் 50 இடங்களில் பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்கான டெண்டர்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு சென்னையில் பொருத்தும் பணி நடைபெற இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராவில் சிக்கிய திருட்டு வாகனம் தொடர்பாக அருகில் இருக்கும் ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல் நிலையங்களுக்கும் வாட்சப் குறுஞ்செய்தி மற்றும் தானாக செல்போன் அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வாகன திருட்டும் மற்றும் திருட்டு வாகனங்களை பயன்படுத்தி நடைபெறும் பெரும்பாலான குற்றங்களை குறைக்க உதவும் எனவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via