திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

by Editor / 07-02-2023 10:23:05pm
திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரிசி ஆலை ஒன்றில் போலி மதுபானங்கள்   தயாரிப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பான விசாரணையில், அதை நடத்தியவர்,  மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவது தெரிய வந்தது. இவரது மனைவி ஜெயந்தி. இவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.  அங்கிருந்த  5 ஆயிரம் போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வடிவேலுவையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via