சாலை விபத்தில் ஆசிரியை பலி

by Staff / 13-02-2023 11:11:15am
 சாலை விபத்தில் ஆசிரியை பலி

சென்னை அம்பத்துார் அயப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவரது மனைவி விஜயலட்சுமி (49), திருமங்கலத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று கணவருடன் இருசக்கர வாகனத்தில் அத்திப்பட்டு, வானகரம் சாலையில் சென்றார். அப்போது, எதிரே வேகமாக வந்த சரக்கு லாரி, அவர்களது வாகனம் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயலட்சுமி, அந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணைமேற்கொண்டுவருகின்றனர். 
 

 

Tags :

Share via