சமைக்கும் போது பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்

by Staff / 11-10-2022 05:09:18pm
சமைக்கும் போது பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி காமாட்சி (58). இவர் வழக்கம் போல் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, விறகு கட்டையில் இருந்த நெருப்பு அவரது சேலையில் பட்டு தீப்பிடித்தது. இதில் சேலை முழுவதும் எரிந்து, அவரது உடலிலும் தீப்பிடித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்த்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via