தனக்கு தானே போதை ஊசி செலுத்திக் கொண்டவர் பலி

by Staff / 27-04-2024 04:19:02pm
தனக்கு தானே போதை ஊசி செலுத்திக் கொண்டவர் பலி

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26). போதை பழக்கங்களுக்கு அடிமையான இவர் போதை மருந்தை ஊசி மூலம் தனக்கு தானே உடலில் செலுத்திக் கொண்டார். இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீனதயாளன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 

 

Tags :

Share via