ஆந்திராவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை 10 மாவட்டங்களில் மின்னல் எச்சரிக்கை

by Staff / 07-06-2022 12:12:30pm
ஆந்திராவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை 10 மாவட்டங்களில் மின்னல் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. சித்தூர் கடப்பா விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் மின்னல் தாக்கி ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via