நீண்ட இழுபறிக்குப் பின் ‘இண்டியா’ கூட்டணி தொகுதி பங்கீடு

by Staff / 09-04-2024 02:53:48pm
நீண்ட இழுபறிக்குப் பின் ‘இண்டியா’ கூட்டணி தொகுதி பங்கீடு

மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான ‘இண்டியா’ கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று நிறைவடைந்துள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) ஆகிய கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டு வந்ததால் இழுபறி நீடித்தது. இதனால் கூட்டணி உடையும் அபாயமும் இருந்தது. இந்த நிலையில் சிவசேனா-21, காங்கிரஸ்-17, தேசியவாத காங்கிரஸ்-10 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்து தொகுதி பங்கீடு இறுதியாகி உள்ளது.

 

Tags :

Share via