பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பறித்த மந்திரவாதி கைது

by Staff / 20-01-2023 04:33:34pm
 பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பறித்த மந்திரவாதி கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (42). கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், முதலில் பழனியம்மாளிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டு மெதுவாக பேச தொடங்கினார்.பின்பு குடும்பம் குறித்து குறி சொல்லி உள்ளார். மேலும் தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட் டில் ஒரு பொருள், அதாவது அது தங்கப்புதையல் உள்ளது. அந்த புதையலை எடுக்காவிட்டால் உங்களது மூத்த மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.இதற்கு தீர்வாக முதலில், பழனியம்மாள் வீட்டு பூஜைய றையில் கலசம் வைத்து 21 நாட்கள் திருமணம் ஆகாத கன்னிபெண் பூஜை செய்து வரவேண்டும். பிறகுதான் அந்த பொருளை வெளியே எடுக்க முடியும் என அந்த நபர் கூறி உள்ளார். மேலும் அந்த புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ. 1 லட்சம் வரை செலவாகுமென கூறி யுள்ளார்.
கலசம் செய்வதற்கு முன் தொகையாக ரூ. 50 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் ரூ. 25 ஆயிரம் மட் டுமே உள்ளதாக கூறி பழனியம்மாள் கொடுத்துள்ளார். அந்த தொகையை பெற்றுக்கொண்ட மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு கலசம் ஒன்றையும் தந்துள்ளார். அப்போதும் அவர் பணம் வாங்கியதாக தெரிகிறது. இப் படியே சிறுக, சிறுக ஆன்லைன் வங்கி கணக்கு மூல மும் சுமார் ரூ. 1 லட்சம் வரை பணத்தை அந்த பெண் இழந்துள்ளார்.இந்த நிலையில் புதையலை எடுத்து கொடுக்காமல் அந்த நபர் தலைமறைவானார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தங்க புதையலை எடுக்க விடாமல் ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது. மேலும் பணம் வேண்டும் என கேட்க சந்தேகமடைந்த பழனி யம்மாள் இது குறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பெண்ணிடம் மோசடி செய்த மந்திரவாதி குறித்து விசாரணை நடத்தினார். இதில் புதையல் எடுத்து கொடுப்பதாக கூறி, பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பறித்தது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறைய மங்கலம் பகுதியை சேர்ந்த மந்திரவாதி செல்வராஜ் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
புதையல் எடுப்பதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த குறி சொல்லும் மந் திரவாதி கைது செய்யப்பட்ட சம்பவம் வாழப்பாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via