மேலூர்,பகுதிகளில் இடியுடன் கனமழை

by Editor / 17-08-2021 09:36:28am
மேலூர்,பகுதிகளில்  இடியுடன் கனமழை

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழையூர், நாவினிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, அழகர்கோயில், கிடாரிப்பட்டி, சென்னகரம்பட்டி, ஆண்டிப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.

இந்த கன மழையால் பகலில் நிலவிய கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது, மேலும் இந்த மழையால் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

 

Tags :

Share via