மனித சங்கிலி மூலம் இந்திய வரைபடம் உருவாக்கி உலக சாதனை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மனித சங்கிலி மூலம் இந்தியவரைபடம் உருவாக்கி உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜ்வாலா என்ற நிறுவனம் ஒருங்கிணைந்த இந்நிகழ்ச்சியில் 5335 பேர் பங்கேற்று இந்திய வரைபடத்தை உருவாக்கினர். நாடு சுதந்திரம் பெற்று 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹரியானாவில் 6600 அடி நீளமுள்ள மூவர்ணக்கொடி உருவாக்கப்பட்டு யாத்திரை நடைபெற்றது.
Tags :