அதிருப்தியில் எம்.எல்.ஏ.க்கள்... சிக்கலில் புதிய முதலமைச்சர்... கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு...
கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கத்தால் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த பாஜக மேலிடத்தின் உதவியை முதல்வர் பசவராஜ் பொம்மை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதிவி விலகியதை தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 29 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இலாகாக்களை ஒதுக்கியதில் பலர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த பல மூத்த எம்எல்ஏக்கள் வாய்ப்பு வழங்கப்படாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு கட்சிக்குள் பூசல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த பாஜக மேலிடத்தின் உதவியை முதல்வர் பசவராஜ் பொம்மை நாடியுள்ளார்.
Tags :