மத்திய அரசிடம் ஒப்படைக்கவுள்ள வோடபோன் பங்குகள்!

by Admin / 04-08-2021 02:39:21pm
மத்திய அரசிடம் ஒப்படைக்கவுள்ள வோடபோன் பங்குகள்!



வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயார் என ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

ஜியோவின் வருகையை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து  கொள்ளவும் அதற்கு ஈடாக சலுகைகளை வழங்கியதன் பேரில் வோடபோன் நிறுவனம் இத்தகைய நஷ்டத்தை சந்தித்துள்ளது. தற்போது வோடபோன் அதன் சந்தை மதிப்பில் மேலும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இழந்துள்ளது.
 
இதையடுத்து வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயார் என ஆதித்யா பிர்லா குழுமத்தில் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கபாவுக்கு குமார் மங்கலம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via