கட்டிடத்தின் மேலிருந்து குதித்த சிறுமி

by Staff / 13-02-2023 12:34:29pm
கட்டிடத்தின் மேலிருந்து குதித்த சிறுமி

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹாசினி கங்காதாரா பகுதியில் உள்ள மகாத்மா ஜோதிபாபூலே குருகுல பள்ளியில் மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுதியில் தங்க அவருக்கு விரும்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் அவருக்கு கால் முறிந்தது. பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via