அரசு பள்ளி மாணவி கழுத்தை அறுத்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள இடைகழிநாடு உட்பட்ட
56, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் சுவிதா வயது 17. இவர் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் நல்லூர் பகுதியில்இருந்து , ஷேர் ஆட்டோ மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல ஷேர் ஆட்டோவிற்காக வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவி காத்திருந்தார்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். கையில் எடுத்து வந்த பிளேடு வைத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர்.இதனை அடுத்து மாணவியின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியதால் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த மூன்று இளைஞர்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்து மாணவியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூனாம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
Tags :