வேன் அணைக்குள் பாய்ந்து ஏழு பேர் பலி

by Staff / 17-02-2023 04:13:21pm
வேன் அணைக்குள் பாய்ந்து ஏழு பேர் பலி

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில்  கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கரகாட் மலைத்தொடரில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 26 யாத்ரீகர்கள் கைமூர் மலையில் உள்ள குப்தேஷ்வர் மகாதேவ் குகைக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​வேனின் பிரேக் பழுதாகி, துர்காவதி நீர்த்தேக்கத் திட்ட அணையில் 70 அடி ஆழத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் வேனுடன் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

 

Tags :

Share via