தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் துப்பாக்கிச் சூடு

by Staff / 17-02-2023 04:08:59pm
தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் துப்பாக்கிச் சூடு

தமிழ்நாடு - கர்நாடக எல்லை பாலாறு வனப்பகுதியில் மலையோர தமிழ்நாடு கிராமங்களில் இருந்து சிலர் பரிசலில் பாலாற்றைக் கடந்து வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 பரிசல்களில் சென்றவர்கள் கா்நாடக வனப்பகுதியிர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், இவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா என்பவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
 

 

Tags :

Share via