கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பட்டி அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அன்னம்பாரிபட்டியை சேர்ந்த பசுபதி என்ற பெண்ணும் மதுரையைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரும் 22 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து(23-09-2022) இருவரையும் கைது செய்தனர்.
Tags :