தென்காசியில் சீமான் உருவப்படத்தை எரித்தவர்கள்  கைது.

by Editor / 20-02-2023 07:20:54pm
தென்காசியில் சீமான் உருவப்படத்தை எரித்தவர்கள்  கைது.

நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை  அவதூறாக பேசியதாக கூறி அவரது உருவ பொம்பையை எரித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் , மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.தென்காசி புதிய பேரூந்துநிலையம் முன்பு திராவிடத்தமிழர் கட்சி  மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன்,மாவட்ட தலைவர் லெட்சுமணன்,மாவட்ட இளைஞணி செயலாளர் சங்கை மதன்,ஆலங்குளம் ஒன்றிய தலைவர் மனோகரன்,சரவணன், உள்ளிட்டோர் சீமான் படத்தை  எரித்து போராட்டம் நடத்தினர்.மேலும் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் போராடியவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்துபோக செய்தனர்.சிலபகுதிகளில்கைதும் செய்தனர்.

 

Tags :

Share via