பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் -சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்.

by Editor / 24-03-2022 08:35:59am
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் -சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்.

தென்காசி மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு  மற்றும் பகல் நேரங்களில் பைக் ரேஸில்  ஈடுபடும் இளைஞர்களால் பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இன்று தென்காசி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தென்காசி சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்து கரை அருகில் போலீசார் கண் இமைக்கும் நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட தென்காசியை சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர்,(21) சேக்மைதீன் (19) முகம்மது (21) மூன்று இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் உதவி ஆய்வாளர்கள் கபீர்தாசன்,செல்வி, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர்கள் சதாம் உசேன், சௌந்தர்ராஜன், உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags : Youths involved in bike races - Police arrested around.

Share via