பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

by Editor / 09-11-2023 11:35:39pm
பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருநெல்வேலி: மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தாழையூத்தைச் சேர்ந்த பொன்னுமணி, நல்லமுத்து, லட்சுமணகுமார், ஆயிரம், ராமர், சிவா ஆகிய 6 பேர் நெல்லை மாநகர ஆணையர் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதி பெயரைகேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்திருந்தது.

 

Tags : பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

Share via